கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவரது வீட்டின் அருகே ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஷாஜகானுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டு பிரிந்து ஷாஜகான் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் அவரது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது ஷாஜகான் கைகள் மூலம் ஆபாச சைகை காட்டி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக வீட்டிற்குள் சென்று விட்டார்.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வெளியே வந்த இளம் பெண்ணிடம் ஷாஜகான் செல்போனில் உள்ள ஆபாச புகைப்படத்தை காண்பித்து, “எனது வீட்டில் யாரும் இல்லை, நான் தனியாகத்தான் இருக்கிறேன், நாம் இருவரும் சந்தோஷமாக உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஷாஜகானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.