கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவனுடன் விளையாடி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை சூர்யா தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததால் சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது சிறுவன் நடந்தவற்றை தெரிவித்து அழுதான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது