விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தெய்வகனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெய்வகனியின் மனைவி சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.