கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதிப்பெண் குறைவாக எடுத்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். கரூரில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது கடலூரில் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.