விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.