நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த கரடி ருக்மணியை தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கரடியை விரட்டியடித்து ருக்மணியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.