சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பத் அரளி விதையை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.