கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, மூதாட்டியின் கை, தலை பகுதிகளில் காயம் இருந்ததோடு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

அவரது உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்க நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.