தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் சிவசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சிவசேகரின் வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். அப்போது திடீரென வந்த பெண் தந்திரமாக பேசி உறவினார் போல நடித்து பீரோவில் இருந்து தங்க நகைகளை பட்டப்பகலிலேயே திருடி சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மைதிலி என்பவரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் திருடியுள்ளார். இதனையடுத்து மைதிலியிடம் இருந்த 10 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.