திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நத்தம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதே போல கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.