சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாமலை நகரில் இருக்கும் டைமண்ட் ஜூப்லி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று காலை மாணவிகள் விடுதிக்குள் நுழைந்தார்.

அவர் பயிற்சி டாக்டரிடம் நான் உன்னை காதலிக்கிறேன்; நீ என்னை மட்டும் தான் காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பெண் டாக்டரை வாலிபர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து இளம்பெண் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.