வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்..

தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே வாரச்சந்தை மைதானத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் தந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் கூட்டத்தில் சிக்கி படுகாயமடைந்த 14 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். புளூ மெட்டல்ஸ் உரிமையாளரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ஐயப்பனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..