ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக தனுஷ் சடன் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தனுஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் தனுஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.