தேனி மாவட்டத்திலுள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் 36 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு நேரத்தில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த டிரைவர் சுரேஷ், காமாட்சி, சரஸ்வதி, வெள்ளைத்தாய், முனீஸ்வரன் ஆகிய 5 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.