கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திராவுக்கு சென்றுள்ளார் இவருடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தினமும் தனது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் சங்கீதாவை தொடர்பு கொண்டு பேசவில்லை.

இந்நிலையில் நேற்று காரில் வந்த சிலர் ஸ்டாலினின் உடலை எடுத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் ஸ்டாலினின் உடம்பில் பல்வேறு வெட்டு காயங்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சங்கீதா மருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்டாலினின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.