புதுக்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதேபோல புது புதுக்கோட்டை போலீசில் ரேவதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சுரேஷ், ரேவதி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது, பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு பேரும் புதுக்கோட்டையில் வேலை பார்த்த போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு ரேவதி ஆகிய இருவரையும் உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர் என கூறியுள்ளனர்.