புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது விசைப்படகு மீனவர் ஒருவரது வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீன் சுமார் 90 கிலோ எடை உடையது. மீனவர் அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து மீன் மார்க்கெட்டில் வைத்து அந்த மீன் 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ராட்சத திருக்கை மீனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.