நாகப்பட்ட மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கோடீஸ்வரன் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கோடீஸ்வரன் தகராறு செய்தது உறுதியானது. இதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோடீஸ்வரன் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.