ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கோபியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் பாலாஜி சிறுமியிடம் விசாரித்த போது அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பதும், ஆசை வார்த்தைகள் கூறி லோகநாதன் கடத்தி சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தலைமறைவான லோகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.