நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 14 வது தவணை விவசாயிகளுக்கு வருகின்ற ஜூலை 28ஆம் தேதி வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ கேஒய்சி முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே அவர்களின் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்படும் எனவும் இகேஒய்சி முடிக்காதவர்களுக்கு பணம் கிடையாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.