கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும் அக்கா சந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த சந்தியா அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் மது குடித்துவிட்டு வருகிறாயே? என கண்டித்தனர்.

மேலும் நீ படிக்காமல் மது குடித்து விட்டு வந்தால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என சந்தியா தனது தம்பியை மிரட்டினார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்m