பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, ஜனநாயகத்தை சிதைத்த பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்” என குறிப்பிட்டுள்ளது.