பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, ஜனநாயகத்தை சிதைத்த பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்” என குறிப்பிட்டுள்ளது.