சமீபத்தில் நடிகர் பிரபு உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவருக்கு சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் பிரபு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவருடன் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, அடுத்த வாரம் சூட்டிங்கில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.