நடிகை மாளவிகா அவினாஷ் இதுவரையிலும் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கேஜிஎப் திரைப்படத்திற்கு பின் அவர் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப் பணியாற்றி வருகிறார் மாளவிகா அவினாஷ்.

இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது “உங்களில் யாருக்காவது மைக்ரேன்(ஒற்ரை தலைவலி) பிரச்சனை இருப்பின் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இல்லையென்றால் நீங்கள் என்னை போன்று மருத்துவமனை படுக்கையில் இருக்க வேண்டி இருக்கும்.

ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபட பாரம்பரிய மருத்துவத்துடன் பனடோல், நெப்ரோசிம் போன்றவற்றை எடுத்துக்கொண்டேன். ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகவேண்டும்” என அவர் பரிந்துரைத்தார். இதுகுறித்த மாளவிகாவின் பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.