சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 04) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 94.24க்கு  விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 287 நாட்களாக எந்த மாற்றமுமின்றி நிலையாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.