ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன் புணர்வு செய்த வழக்கில் கார்த்தி(பெயர் மாற்றம்) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் படி  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கார்த்தி தன் மனைவி கிருத்திகா(பெயர் மாற்றம்) மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இவருக்கும் கிருத்திகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கிருத்திகா தன் மகள் இருவரையும் விடுதியில் சேர்த்துள்ளார்.

இதற்கு கார்த்தி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு, விடுதியிலிருந்து மகள்கள் விடுமுறைக்காக வீடு திரும்பி உள்ளனர்.  அப்போது கார்த்திக் மற்றும் அவரது 13 வயது மூத்த மகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கார்த்தி பெல்ட்டால் மூத்த மகளை தாக்கி உள்ளார். இதுகுறித்து கிருத்திகா கேட்டபோது கார்த்தி ஏதேதோ காரணம் கூறி சமாளித்துள்ளார்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த கிருத்திகா அவரை கண்காணிக்க துவங்கினார். அதன்படி கார்த்தியின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில், அவரது மூத்தமகளின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளது. இதனால் கிருத்திகா மகளிடம் விசாரித்து உள்ளார்.  அப்போது மகள் தன்னை 3 வருடங்களாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததையும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்ததையும் தெரிவித்து உள்ளார். அதன்பின் கிருத்திகா அளித்த புகாரின்படி கார்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.