திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1:30 மணிக்கு மேல் மழை பெய்தது.

சுமார் 1 1/2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி, சாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நட்சத்திர ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.