திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே. கீரனூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு யோகேஷ்(14), கவியரசன்(12) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் யோகேஷ் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அண்ணன், தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விளையாட்டாக கவியரசன் தனது அண்ணனை திட்டியுள்ளார்.

இருவரையும் பெற்றோர் சமரசம் செய்தனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யோகேஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.