கடந்த மாதம் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ‘இந்தியா மிக வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்கால நகரங்களை உருவாக்குவது முக்கியம். இந்த உணர்வு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. காலை 10 மணிக்கு, பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து பேச உள்ளேன்’ என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.