மாதவிடாய் தினங்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க கோரி உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது. அதே சமயத்தில் மனுவின் கோரிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை மனுதாரர் நாடலாம் என அறிவுரை சொல்லி வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.