தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேனர்களை கிழித்த சென்னல்தாபுதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மகாராஜா, வைகுண்ட ராஜா, சுபாஷ், பொன்மாரி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.