வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்நிலையில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.