பொதுவாகவே வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் வந்து உள்ளிட்ட பொருட்களை தூக்கி போட்டால் ஓடி சென்று அதனை கவ்வி கொண்டு வரும். அதனைப் போலவே திருப்பத்தூர் அருகே ஒரு வீட்டுக்குள் நுழைந்த நாய் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ரவி மற்றும் அவருடைய மனைவி துக்க வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது செல்போனை வீட்டின் படியில் வைத்து விட்டு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தால் செல்போனை காணவில்லை. அதன் பிறகு சிசிடிவி வீடியோவை பார்த்தபோது நாய் ஒன்று வீட்டுக்குள் வந்து செல்போனை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. அதன் பிறகு ஒரு குப்பை தொட்டி அருகே அந்த செல்போன் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.