கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் டிரைவர் கண்டக்டர் உட்பட 7 பேரையும் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த ஒரு பயணியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.