திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக்  கொலை செய்யப்பட்டார். எம் ஆர் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீடு புகுந்து சண்முகசுந்தரம் கொல்லப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது..