உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரை சேர்ந்தவர் சச்சின். இவர் பப்ஜி விளையாடிய போது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த போதிலும் சச்சினுடன் pubg விளையாட்டின் போது தொடர்ந்து பேசி வந்துள்ளார். இது காதலாக மாறவே தனது கணவரை விட்டுவிட்டு சச்சினை பார்க்க பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு உள்ளார். கடந்த மாதம் குழந்தைகளை அழைத்து கொண்டு நேபாளுக்கு சென்ற சீமா அங்கிருந்து சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

பின்பு பப்ஜி காதலனான சச்சின் சீமா மற்றும் நான்கு குழந்தைகளுடன் நோய்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். ஆனால் உளவுத்துறைக்கு சீமா மீது சந்தேகம் வரவே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பப்ஜி காதலால் சீமா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்தது தெரியவர குழந்தைகளுடன் சீமா கைது செய்யப்பட்டார்.