இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து புரிதல் இல்லாமல் உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் போர்ட் ஒன்றைப் பற்றி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம்.

இதனால் அந்த பகுதியில் வாகனத்தை மெதுவாக ஓட்டக்கூடாது என்றும் இடையே நிறுத்தக்கூடாது எனவும், பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் ஒரு நொடி கூட நின்று யாரையும் பிக்கப் செய்யக்கூடாது என்று அர்த்தம். இந்த குறியீடு போடப்பட்டிருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது இந்த குறியீடு இருந்தால் அந்த சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும். ஒருவேளை விதியை மீறி செயல்பட்டால் விபத்து நேரிடலாம். மக்கள் மத்தியில் விபத்துக்கள் குறைப்பதற்கு சாலை விதிகளில் போதை விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசை இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.