ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தவறான சிக்னல் தரப்பட்டது ஒடிசா ரயில் விபத்து காரணம் என விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.