விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை சாய் காயத்ரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீரியலில் இருந்து வெளியேறுகிறேன். அந்த கதாபாத்திரம் எனக்கும் என் வருங்காலத்திற்கும் உகந்ததாக தெரியவில்லை. இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.