தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சிவாஜி திரைப்படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் சொந்த வாழ்க்கையில் மனைவியாக, தாயாக மாறிய பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அவர் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரேயா பேட்டியளித்தபோது சினிமா அனுபவம் பற்றி சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தார்.

அதாவது, “வாழ்க்கையில் என் பயணம் மிகவும் நன்றாக நடந்தது. ஏற்றத்தாழ்வுகள் என்பது அனைவருக்குமே வரும். சவால்களை நான் எதிர் கொண்டு, அவற்றை மன தைரியத்துடன் சந்தித்து வெளியே வந்தேன். ஆகவே வெற்றி, தோல்விகள் அனைவருக்கும் சகஜம்தான். எல்லாவற்றையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புது வாய்ப்புகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார். அதை எட்டிப் பிடிப்பது தான் நம் கையில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.