சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அதன்பின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ரயில் சேவைகளை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர்கள் இல்லாத 138 தானியங்கி ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.