டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, என் தந்தை சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னை அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என ஸ்வாதி மாலிவால் கூறினார். இதுகுறித்து முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி பர்க்கா சுக்லா இன்று கூறியதாவது, “டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலை உருளைக்கிழங்கு என ஸ்வாதி மாலிவால் கூறினார்.

கெஜ்ரிவால் உடனேயே அவர் வாழ வேண்டும். ஏனெனில் உருளைக்கிழங்கும், சிப்சும் நண்பர்கள். அவருக்கு மனநல சமநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கிறேன். அதனால் தான் இதுபோன்று ஸ்வாதி மாலிவால் பேசி வருகிறார். முதலில் தன்னை அடிக்கிறார் என்று கணவர் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது உயிரிழந்த அவரது தந்தையை இது போல் குற்றஞ்சாட்டி வருகிறார். அவர் கூறுகிற குற்றச்சாட்டுகள் உலகில் எந்த பகுதியிலும் இல்லாதது. இது முற்றிலும் தவறு மற்றும் அதிர்ச்சியூட்ட கூடியது” என்று கூறியுள்ளார்.