மத்தியப்பிரதேசம் மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இத்தம்பதியினருக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இதனிடையே தன் மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். மகள் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் அண்மை காலமாக சின்ன சின்ன சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்து உள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஷியாம் சுந்தரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிலையில் மருமகன் ராஜூ தன் 2 உறவினர்களுடன் சேர்ந்து மாமனார், மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். அதோடு திடீரென கோபத்தில் அவரது மாமியார் ஷியாம் சுந்தரியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் தன் மனைவி ராம் விலாசியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ரஹ்மத். இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.