டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை பூசி, தலையில் முட்டையை உடைத்து பாலியல் ரீதியில் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அப்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகாரளிக்கவில்லை. ஆனால் மூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹோலி கொண்டாட்டத்தின்பொது வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.