இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை நடிகர் ரஜினி நேரில் சென்று பார்த்தார். ஜெயிலர் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ள அவர் நேற்று சூட்டிங் இல்லாத காரணத்தால் மைதானத்திற்கு விசிட் அடித்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகர் ரஜினியை நேரில் சென்று சந்தித்துள்ளார் இந்திய வீரர் குல்தீப் யாதவ். அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என இந்திய வீரர் குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார். தலைவரை சந்தித்து தானும் தலைவரின் ரசிகர் என நிரூபித்துவிட்டார் குல்தீப் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.