தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடி பணமோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இவர் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு ரூபாய்.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இவர்கள் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. அதோடு ஜாக்குலினிடம் அவரை கதாநாயகியாக வைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாக சுகேஷ் உறுதியளித்த தகவலும் அம்பலமாகியது.

அதே நேரம் சுகேஷ் சந்திரசேகரை 2 முறை சந்தித்தேன். அவரால் என் வாழ்க்கை நரகமாகிவிட்டது என ஜாக்குலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வாழ்க்கை மற்றும் அவருக்கும் ஜாக்குலினுக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்டவற்றை படமாக்க உள்ளதாக இந்தி தயாரிப்பாளர் ஆனந்த்குமார் அறிவித்துள்ளார். அதாவது, ”சுகேஷ் எப்படி நெட்வொர்க்குகளை உருவாக்கி மோசடிகள் செய்தார் என்பதை திரையில் காட்ட விரும்புகிறேன். திகார் சிறை அதிகாரியை சந்தித்து சுகேஷ் தொடர்பான விவரங்களை சேகரிக்க இருக்கிறேன். இதனை சினிமா படமாகவோ (அ) வெப் தொடராகவோ எடுப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.