அஞ்சாதே, யுத்தம்செய், பிசாசு, துப்பறிவாளன் உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். இப்போது பிசாசு- 2 படத்தை இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே நந்தலாலா, சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள மிஷ்கின், இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து அவரைத் தேடி வில்லன் வாய்ப்புகள் அதிகம் வந்துகொண்டிருப்பதால் அடுத்தபடியாக முழு நேர நடிகராவதற்கு திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். மேலும் தன்னிடம் கால்சீட் கேட்டு வருபவர்களிடத்தில் நாளொன்றுக்கு தனக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தரவேண்டும் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார் மிஷ்கின்.