சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட அனைத்திலுமே ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளும் முறையானது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை போக்குவரத்துக் குழுமம் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செயல்படுத்துவதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்காக உருவாக்கப்பட உள்ள செயலி வாயிலாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு ஒரே டிக்கெட் முறையினை அமல்படுத்துவதற்காக மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்திருக்கிறது.