தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கஞ்சா விற்பவர்கள், கடத்துபவர்கள், பதுக்குபவர்கள் என யார் பற்றிய தகவல் கிடைத்தாலும் 044-28447791 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் இது பற்றிய தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு உறுதி கொடுத்துள்ளார்.